April 22, 2024

ஒரு நடிகை தனியாக இருந்தாலே இது தான் பிரச்சனை ..!! இரண்டாம் திருமணம் குறித்து ஓப்பனாக சொல்லிய மீனா ..!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவையே  ஒரு கலக்கு கலக்கியவர் தான் நடிகை மீனா.  அந்த வகையில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மீனா.  பின்னர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எஜமான் ,சேதுபதி ஐபிஎஸ் , நாட்டாமை ,அவ்வை சண்முகி ,பாரதி கண்ணம்மா,  வானத்தைப்போல போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில்  நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் நடிகை மீனா தமிழ் மொழி ,

மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே வித்யசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை மீனா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் .

இப்படி இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மீனாவின் கணவர் இறந்துவிட்டார்.  பின்னர் கணவரின் இறப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த மீனாவை ஒன்றை ஆண்டுகளாக இரண்டாம் திருமணம் செய்ய சொல்லி பலரும் ,

கேள்வி எழுப்பி வருகின்றனர் . இதுகுறித்து பேசிய மீனா , என்னுடைய கணவர் இறந்து ஒன்றை வருடங்கள் ஆகிய நிலையில் ,இன்னும் அவருடைய மறைவை என்னால் ஈடுகெட்ட முடியவில்லை . குறிப்பாக ஒரு ஹீரோயின் தனியாக இருந்தாலே பல வதந்திகள் வரும்.

அந்த மாதிரியான வதந்திகள் என்னையும் , என்னுடைய குடும்பத்தையும் பெரிய அளவில் பாதித்தது.  தற்போது நான் இரண்டாம் திருமணம் குறித்து யோசிக்க வில்லை என்று கூறியிருந்தார் நடிகை மீனா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *