May 6, 2024

என்னால் ரசிகர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது ..!! அடுத்த முக்கிய முடிவை எடுத்த அஜித் ..!! இந்த காலத்தில் இப்படியொரு நடிகரா ..??

தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருபவர் நடிகர் அஜித் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக ஜெயித்துக் காட்டிய அஜித் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . அப்படி அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதை அடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி,

இயக்கி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் அஜித்.  இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் தன்னால் ரசிகர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக அதிரடி முடிவு,

ஒன்றை எடுத்து விட்டாராம் அஜித் . அது என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்ததாம் . அந்த நேரத்தில் அஜித்தை பார்ப்பதற்காக ரசிகர் ஒருவர் தடுப்பு சுவரின் மேல் ஏறி நின்று உள்ளே விடவில்லை என்றால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்,

என்று கூறினாராம் . இதை பார்த்த அஜித்தை அதிர்ச்சி ஆகிவிட்டாராம்.  அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பை முடித்து வீடு திரும்பிய அஜித்தின் காரை ரசிகர்கள் துரத்தி வந்துள்ளனர்.  இப்படி தன்னால் ரசிகர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக சென்னையில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது,

என்று முடிவெடுத்து விட்டாராம் அஜித்.  இதனாலேயே  இவருடைய படப்பிடிப்பு பெரும்பாலும் ஹைதராபாத் அல்லது வெளிநாடுகளில் நடப்பதாக கூறப்படுகிறது . இருந்தாலும் அஜித் இப்படி செய்வதால்  தமிழ்நாட்டு சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது …