தமிழ்த்திரை உலகில் ஒரு வித்தியாசமான நடிகர் என்றால் அது சியான் விக்ரம் தான் . ஆரம்பத்தில் இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்தும் அந்த படங்கள் தோல்வி படமாக அமைந்தது . அந்த நேரத்தில் தான் சேது என்ற ஒரு திரைப்படம் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . இதன் பிறகு தான் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் விக்ரம் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,
இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . குறிப்பாக படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் நடிகர் விக்ரம். இன்னும் சொல்லப்போனால் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு தன்னுடைய தரமான நடிப்பால்,
ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் விக்ரம் . அது மட்டுமல்லாமல் ஒரு படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் மெனக்கிடுவார் நடிகர் விக்ரம். அந்த வகையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விக்ரம் .
இதை அடுத்து தற்போது இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் நடிகர் விக்ரம் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வந்தார் நடிகர் விக்ரம். அந்த வகையில் தங்கலான் படத்திற்காக 23 கோடி,
சம்பளம் வாங்கி இருக்கிறார் நடிகர் விக்ரம் . இப்படி இருக்கும் நிலையில் ரஜினி , விஜய்யை போல தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார் நடிகர் விக்ரம் . அந்த வகையில் தன்னுடைய 62 ஆவது படத்திற்காக 50 கோடி சம்பளம் வாங்க உள்ளாராம் நடிகர் விக்ரம்…