May 2, 2024

பிரதமர் மோடியை நினைத்தால் பெருமையா இருக்கு ..!! அதை பற்றி பேசும்போதே எனக்கு கண்ணீர் வருகிறது..!! அயோத்தி கோவில் குறித்து உருக்கமாக பேசிய இளையராஜா ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த முன்னணி இசையமைப்பாளர் தான் இசைஞானி இளையராஜா அவர்கள் . இதுவரை பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் இளையராஜா இப்போதும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தான் வருகிறார்.  மேலும் இசையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இளையராஜா அவ்வப்போது தன்னுடைய ஆணவத்தால் ரசிகர்களின் ,

வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார் . அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே மோடிக்கு ஆதரவாக இருந்து வருகிறார் இளையராஜா . இப்படி இருக்கும் நிலையில் நேற்று அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது .

இந்த விசேஷத்தில் இந்திய சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் எல்லாம் நேற்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது .  இப்படி இருக்கும் நிலையில் இது குறித்து பேசிய இளையராஜா கூறியதாவது,  இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள்,

இருந்தாலும் ராமர் கோவிலை கட்டிய பெருமை பிரதமர் மோடிக்கு தான் கிடைத்துள்ளது . குறிப்பாக அன்று மன்னர்கள் செய்ததை இன்று பிரதமர் மோடி செய்திருக்கிறார் . மேலும் ராமர் கோவிலை பற்றி பேசும்போதே எனக்கு கண்ணீர் வருகிறது . அயோத்தியில் நான் ,

இல்லாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியிருந்தார் இசைஞானி இளையராஜா அவர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *