April 29, 2024

உண்மையான சூப்பர் ஸ்டார் யார்..?? திரையில் நடிப்பவர்களா ..?? களத்தில் இறங்கி வேலை செய்பவர்களா..?? மக்களின் கருத்து என்ன ..??

காலம் காலமாகவே சினிமா நடிகர்களை தலையில் தூக்கி கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.  அதில் ஒரு சில நடிகர்கள் நிஜத்தில் நடிக்க தெரியாதவர்களாக இருந்தாலும் , பாதி பேர் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் . இது தெரியாமல் அந்த நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்  . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம்,

மிக்ஜாம் புயலால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது . ஆனால் பல பிரபலங்கள் இது குறித்து பரிதாபப்பட்டார்களே தவிர களத்தில் யாரும் இறங்கவில்லை.  இன்னும் சொல்லப்போனால் சிவகார்த்திகேயன், சூர்யா , ஹரிஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் நிதி உதவி வழங்கியிருந்தனர்.

ஆனால் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ,அஜித் போன்ற நடிகர்கள் இதைப் பற்றி சுத்தமாகக் கண்டுக்கொள்ளவில்லை .  இந்த இக்கட்டான நேரத்தில் தன்னுடைய கையில் இருந்த இரண்டு லட்சத்தையும் சென்னை மக்களுக்காக பிரித்துக் கொடுத்தார் கே பி ஒய் பாலா .

அது மட்டுமல்லாமல் திரும்பவும் மனசு கேட்காமல் சீட்டு போட்டு வைத்திருந்த 3 லட்சத்தையும் சென்னை மக்களுக்காக கொடுத்திருந்தார் பாலா . இதனால் தற்போது உண்மையான சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது . அதாவது திரையில் நடிப்பவர்களா .?

அல்லது , களத்தில் இறங்கி வேலை செய்பவர்களா என்று . இது குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *