நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திடீர் இறப்பு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது . மேலும் இப்படி ஒரு நல்ல நடிகரையும் , நல்ல தலைவரையும் இழந்து விட்டோம் என்று பலரும் அழுது புலம்பி வந்தனர். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சினிமாவிற்காகவும் , அரசியலுக்காகவும் ஓய்வில்லாமல் ஓடிய போது தன்னுடைய உடல்நிலையை,
சரியாக கவனிக்காமல் விட்டு விட்டார் . இதனால்தான் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் அவருடைய மரணத்தை முன்கூட்டியே கணித்து விட்டதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
அந்த வகையில் அவர் கூறியதாவது , கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்டார் . அதனால் தான் இருக்கும் போதே தன்னுடைய மனைவியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்து விட்டார் . இது நடந்து முடிந்த 10 வது நாளிலேயே,
இறந்துவிட்டார் கேப்டன் . இதனால்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அவசர அவசரமாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது . மேலும் பிரேமலதா விஜயகாந்த் அளவிற்கு கட்சியை சரியாக கொண்டு செல்வாரா என்பது விரைவில் தெரியவரும் .
இருந்தாலும் பிரேமலதாவை கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்வது தொண்டர்களுக்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்…