தமிழ் சினிமா உலகில் எண்பது , தொண்ணூறு காலகட்டங்களில் ஓர் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ராதா . இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர் . அதில் இவருடைய மூத்த மகள் தான் நடிகை கார்த்திகா நாயர் . கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு,
கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அன்னக்கொடி , புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை கார்த்திகா நாயர் .
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு திறமையான நடிகையாக இருந்தும் கூட இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இன்னும் சொல்லப்போனால் கடந்த எட்டு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார் நடிகை கார்த்திகா நாயர். இப்படி இருக்கும் நிலையில் தற்போது 31 வயதாகும் நடிகை கார்த்திகா நாயர் கல்யாணத்துக்கு தயாராகி விட்டாராம். அந்த வகையில்,
தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் நடிகை கார்த்திகா நாயர். இதைப் பார்த்த ரசிகர்கள் கார்த்திகா நாயருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…
View this post on Instagram