தேசிய விருது என்பது இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது போன்றது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு திரைப்படம் தேசிய விருது வாங்குகிறது என்றால் அந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு தரமான திரைப்படமாகத்தான் இருக்கும் . ஆனால் சமீப காலமாக அதிலும் அரசியல் விளையாடி வருகிறது . அந்த வகையில் இந்த முறை பல தமிழ் திரைப்படங்களை தேசிய விருது பட்டியலில் இருந்து நிராகரித்திருக்கிறார்கள் .
ஆனால் அதையும் மீறி மூன்று தமிழ் பிரபலங்கள் தேசிய விருதை வென்றுள்ளனர் . அந்த வகையில் சிறந்த அம்சம் நிறைந்த படத்திற்கான விருதை இயக்குனரும்,நடிகருமான மாதவன் வென்றார் . அதே போன்று சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும், கடைசி விவசாயி படத்தில் ,
நடித்திருந்த நல்லாண்டிக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு தேசிய விருதை யும் வென்று இருந்தார் இயக்குனர் மணிகண்டன் .இவர்களைத் தொடர்ந்து கருவறை என்ற குறும்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றிருந்தார் ஸ்ரீகாந்த் தேவா .இவர்களைத் தொடர்ந்து,
இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற பாடலை பாடியதற்காக தேசிய வருகை வென்றார் பாடகி ஸ்ரேயா கோஷல் . தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தை வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் தேசிய விருது வென்ற பிரபலங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…