சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையிலேயே பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் ஒரே திரைப்படம் அயலான் திரைப்படம் மட்டும் தான். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்திருக்கிறது. இன்று நேற்று நாளை பட இயக்குனரான இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில்,
சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் ,ஈஷா கோபிகர் ,பானுப்பிரியா, யோகி பாபு ,கருணாகரன், பால சரவணன் போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்துள்ளனர் . ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வெளியாக இருக்கிறது . குறிப்பாக இந்த படத்தில் 4500 வி எஃப் எக்ஸ்,
காட்சிகள் இடம் பெற்று இருக்கிறதாம் . அப்படி இந்த படத்தில் காட்டப்பட்ட ஏலியனை தத்துரூபமாக வடிவமைத்து இருந்தார்கள். ஆனால் அந்த ஏலியனாக நடித்திருந்தது ஒரு நடிகர் தானாம். அந்த வகையில் படத்தில் அந்த ஏலியனை வி எஃப் எக்ஸ் காட்சியில் காட்டி இருந்தாலும்,
அந்த காட்சியை எடுக்கும்போது ஒரு நடிகரை வைத்து தான் எடுத்திருக்கிறார்கள். அவர்தான் வெங்கட் செங்குட்டுவன். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…