தற்போது உள்ள காலகட்டத்தில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களை தவறான பாதைக்கு அழைப்பு செல்கின்றனர். இதற்கு உதாரணமாக தற்போது நடிகர் விஜய்யை சொல்லலாம் . காரணம் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது . ஆனால் அந்த ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை,
பேசி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் . அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ரத்தம் தெறிக்க சண்டை போடுவது போல தான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தை குடும்பத்துடன் பார்ப்பது கொஞ்சம் கடினம் தான் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் ஒரு காலகட்டத்தில் ஒரு நடிகர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்து வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய படங்களில் நல்லது எது , கெட்டது எது என்று ரசிகர்களுக்கு தன்னுடைய,
பாடல்கள் மூலமும் , வசனங்கள் மூலமும் கூறி வந்தார் எம் ஜி ஆர் . அந்த அளவிற்கு ரசிகர்களின் நலன் மீது அக்கறையுள்ளவராக இருந்து வந்தார் எம் ஜி ஆர் . ஆனால் இப்படி எம்ஜிஆர் உருவாக்கி வைத்த சாம்ராஜ்யத்தை விஜய் போன்ற ஒரு சில நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக,
அழித்து வருகின்றனர் . இப்படியே போனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவே சீரழிந்து விடும் என்றும் ரசிகர்கள் தவறான பாதைக்கு சென்று விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது…