பொதுவாகவே தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா இயக்குனர்களுக்கும் சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படத்தையாவது எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் . அதனாலயே சூப்பர் ஸ்டாரின் கால் சீட்டுக்காக பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருந்தனர் . மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் பிஸியாக ,
நடித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இந்த படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினி . மேலும் இந்த திரைப்படம் தான் சூப்பர் ஸ்டாரின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டது .
ஆனால் அது உண்மை கிடையாதாம். அடுத்தடுத்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டுக் கொண்டுதான் வருகிறாராம் . இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் சூப்பர் ஸ்டாரை சந்தித்திருக்கிறார் . இதனால் சூப்பர் ஸ்டாரின் 172 வது படத்தை மாரி செல்வராஜ் தான் ,
இயக்க உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் மாரி செல்வராஜ் இதற்கு முன்பு எடுத்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமணன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதனால் இவருக்கு சூப்பர் ஸ்டார் வாய்ப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம் என்றும்,
கூறப்படுகிறது . காரணம் இரண்டே திரைப்படம் எடுத்திருந்த பா ரஞ்சித்துக்கு கபாலி , காலா போன்ற படங்களில் வாய்ப்பு கொடுத்திருந்தார் ரஜினி . அதே போல மாரி செல்வராஜுக்கும் சூப்பர் ஸ்டார் வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது…