ரச்சிதா மகாலட்சுமி ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரச்சிதா மகாலட்சுமி . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலின் மூலம் தான். இந்த சீரியல் இவரை பட்டித் தொட்டி எங்கும்,
பிரபலமாக்கியது . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து நாச்சியார்புரம் ,நாம் இருவர் நமக்கு இருவர் 2 ,இது சொல்ல மறந்த கதை ,புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் ரச்சிதா மகாலட்சுமி . இதனிடையே சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம்,
செய்து கொண்ட ரச்சிதா . ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் . இந்நிலையில் சேலைகளுக்காகவே ஒரு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறாராம் நடிகை ரச்சிதா . அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரச்சிதா விடம், உங்களிடம்,
ஒரு 1000 சேலை இருக்குமா என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ரச்சிதா இல்லவே இல்லை என்னிடம் 5000 சேலைகள் உள்ளது . அதற்காக பெங்களூரில் ஒரு புதிய வீடு ஒன்றையே வாங்கி இருக்கிறேன். அந்த வீட்டில் வைத்திருக்கும் எல்லா சேலைகளுமே விலை உயர்ந்த சேலைகள்.
அதிலும் ஒரே ஒரு சேலை மட்டும் ஒன்றரை லட்சம் . யாராவது சேலை கேட்டாலும் உடனே அதில் ஆன்லைனில் விற்று விடுவேன் என்றும் கூறியிருந்தார் நடிகை ரச்சிதா . இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு சேலைன்னா இவ்வளவு பிடிக்குமா என்று கூறி வருகின்றனர்…