தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான காமெடி நடிகராக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார். இப்படி எந்த அளவுக்கு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாரோ .? அதே அளவிற்கு பல பேரை தன்னுடைய ஆணவத்தால் கதறவிட்டார் வடிவேலு .
அப்படித்தான் பிரபல இயக்குனரின் சாபத்தையும் வாங்கி இருக்கிறார் வடிவேலு. அவர் வேறு யாருமில்லை இயக்குனர் ஷங்கர் தான். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலுவை காதலன் படத்தில் காமெடியன் ஆக்கினார் ஷங்கர் . பின்னர் தொடர்ந்து தன்னுடைய படங்களில்,
வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்த ஷங்கர் பின்னர் வடிவேலுவை ஹீரோவாகவும் மாற்றினார். அந்த வகையில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை ஷங்கர் தான் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் படத்தின்,
இரண்டாம் பாகத்தை வடிவேலுவை வைத்து தொடங்கினார் ஷங்கர் . ஆனால் இயக்குனருடன் சண்டை போட்டு படத்தை விட்டு விலகினார் வடிவேலு . இதனால்ஷங்கருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாம். இதன் பிறகு சங்கரின் சாபம் சும்மா விடுமா வடிவேலுவை புரட்டி எடுத்து,
விட்டது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி பல வருடங்களாக சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த வடிவேலுவுக்கு சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தை தவிர எந்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…