April 27, 2024

“ந வரச நாய கன்” கார் த்திக் கா ணா மல் போ னதற் கு இது தா ன் கார ண மா ..?? இப்படி யெல் லாம் செ ய்து பெய ரை கெடு த்துக்கொ ண் டாரா ..?? வெளி யா ன ஷா க்கி ங் தக வ ல் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களால் நவரச நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக் . மூத்த நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.    பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆகாய கங்கை ,நல்லவனுக்கு நல்லவன் ,மௌன ராகம், ஊமை விழிகள் ,அக்னி நட்சத்திரம், வருஷம் 16 போன்ற,

பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் அப்போது இவரின் அழகில் மயங்காத நடிகைகளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு பெண்கள் மத்தியில் ஒரு கனவு கண்ணனாக வலம் வந்தார் நடிகர் கார்த்திக் .  இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே,

தன்னுடன் இணைந்து நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  பின்னர் நடிகை ராகினியின் தங்கையான ரதியையும் கார்த்திகே திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கும் ஒரு மகன் இருக்கிறார்.  மேலும் ரஜினி , கமலுக்கு ,

அடுத்தபடியாக இருந்து வந்த கார்த்திக் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்தே காணாமல் போய்விட்டார் . அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது . அந்த வகையில் கார்த்திக் அப்போது மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தாராம் . அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பிற்கு சரியாக வராததாலும் ,

தன்னுடைய மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கினாராம். அதோடு ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்த கதாநாயகனாக தன்னை காட்டிக்கொண்டதும் அவருடைய வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *