கடந்த வாரம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து சிவராஜ் குமார் ,மோகன்லால், ஜாக்கி சரப் ,விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில் ,வசந்த் ரவி ,யோகி பாபு, மிர்னா மேனன் என்று பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் .
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது . குறிப்பாக இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது . அது மட்டுமல்லாமல் இந்த,
திரைப்படம் ஆறு நாட்களில் 400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை ஜெயிலர் திரைப்படம் முந்தி விடும் என்று கூறப்படுகிறது . ஆனால் 400 கோடி,
வசூல் என்பது பொய் என்று கூறியுள்ளார் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தான். எப்போதும் ஏதாவது சர்ச்சை கருத்தை கூறி வரும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் வசூல் குறித்தும் பேசியிருந்தார் . மேலும் ஜெயிலர்,
திரைப்படம் 400 கோடி வசூல் செய்தது என்று சொல்வதெல்லாம் பொய் என்றும், அதனால் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் அடுத்த வாரம் 700 கோடி வசூல் என்று பச்சையாக பொய் சொல்வார்கள் என்றும் கூறியிருந்தார் ப்ளூ சட்டை மாறன்…