ரவீந்தர் சந்திரசேகரன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். சுட்டகதை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ரவீந்தர் தொடர்ந்து நளனும் நந்தினியும், நட்புனா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்திருந்தார் . இதனிடையே கடந்த வருடம் பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி என்பவரை இரண்டாம் திருமணம்,
செய்து கொண்டார் ரவீந்தர் . குறிப்பாக பணத்திற்காக தான் மகாலட்சுமி இவரை திருமணம் செய்து கொண்டார் என்று அப்போது பலரும் கூறிவந்தார்கள் . ஆனால் மகாலட்சுமி அவருடைய உருவத்தை பார்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை, மனதை பார்த்து தான் திருமணம்,
செய்து கொண்டேன் என்று சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் 16 கோடி மோசடி செய்த வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். அப்படி விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது . அந்த வகையில் ,
ரவீந்தர் திருமணத்துக்கு முன்பே பல பிரபலங்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . மேலும் இப்படி நடந்த பல விஷயங்களை மறைத்து மகாலட்சுமிக்கும் ஆசை வார்த்தை கூறி தான் ரவீந்திர் திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எதையுமே கேட்காமல் நம்பி கழுத்தை நீட்டி விட்டோமே என்று தற்போது சரியான மன உளைச்சலில் இருந்து வருகிறாராம் நடிகை மகாலட்சுமி…