தமிழ் சினிமா ரசிகர்களால் உலகநாயகன் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன் . திருமணமான இவருக்கு ஸ்ருதிஹாசன் , அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தற்போது படங்களில் நடிகையாக கலங்கி கொண்டு வருகிறார் . இவரைத் தொடர்ந்து அக்ஷரா ஹாசன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஷாமிதாப் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான விவேகம், விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு , அக்னி சிறகுகள் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். மேலும் அக்ஷரா ஹாசன் ஒரு சில படங்களில் உதவி இயக்குனராகவும்,
பணியாற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ருதிஹாசன் அளவுக்கு இவரால் ஒரு நடிகையாக ஜொலிக்க முடியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் அப்பாவிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் புது வீடு வாங்கி இருக்கிறார்,
நடிகை அக்ஷரா ஹாசன் . அந்த வகையில் மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் வாழும் பாந்தரா பகுதியில் 15 மாடி கட்டிடம் கொண்ட அப்பார்ட்மெண்டில் 13வது மாடியில் உள்ள வீட்டை 15.75 கோடிக்கு வாங்கி இருக்கிறார் நடிகை அக்ஷரா ஹாசன் . மேலும் 2245 சதுர அடி கொண்ட,
இந்த வீட்டில் மூன்று கார்கள் நிறுத்தும் அளவிற்கு வசதி உள்ளதாம் . அதோடு இந்த வீடு முழுக்க முழுக்க ரிமோட் கண்ட்ரோலால் இயங்கக்கூடிய முறையில் கட்டமைக்கப்பட்ட தாம் . இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு வீட்டின் விலை 15 கோடியா என்று ஆச்சிரியத்தில் கூறிவருகின்றனர்…