தமிழ் சினிமா உலகில் கடந்த பத்தாம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன்லால் ,சிவராஜ்குமார் ,ஜாக்கிசரஃப் ,விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, சுனில் ,யோகி பாபு போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான,
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது . மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை இவ்வளவு லாபம் பார்த்ததே கிடையாதாம். இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ,
ஒன்றரை கோடி மதிப்புள்ள காரையும் , இயக்குனர் நெல்சனுக்கு நான்கு கோடி மதிப்புள்ள காரையும் பரிசாக கொடுத்திருந்தார் கலாநிதி மாறன். ஆனால் கலாநிதி மாறன் ஒன்னும் சும்மா கார் கொடுக்கவில்லை . அதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறது . அந்த வகையில் ஜெயிலர்,
திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதால் கண்டிப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருமான வரி கட்ட வேண்டும் . அப்படி வரியாக கட்டுவதற்கு பதிலாக காரை பரிசாக கொடுத்தால் வரியை கட்ட தேவையில்லை அதுமட்டுமில்லாமல் இப்படி செய்ததால் சன் பிக்சர்ஸ்,
நிறுவனத்துக்கும் நல்ல பெயர் கிடைக்கும் . அதோடு அடுத்த படத்தில் இவர்கள் இன்னும் நன்றாக பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கலாநிதி மாறனுக்கு உடம்பெல்லாம் மூளை தான் என்று கூறி வருகின்றனர்…