வைகைப்புயல் வடிவேலு ஓர் பிரபலமான முன்னணி காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தார் . இப்படி என்னதான் இவர் தன்னுடைய காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தாலும் , மறுபக்கம் இவர் பல பேரை அழ வைத்திருக்கிறார். அந்த வகையில் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்த வடிவேலு ,
தன்னுடன் நடித்த நடிகர்களுக்கே செலவு செய்ய யோசிப்பாராம் . குறிப்பாக அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதியை வடிவேலுவே எடுத்துக் கொள்வாராம் . இந்த விஷயத்தை சமீபக்காலமாக அவருடன் நடித்த நடிகர்களே புட்டு புட்டு வைத்து வருகின்றனர் . மேலும் சினிமாவில் தான் இப்படி இருக்கிறார் என்று பார்த்தால்,
நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் அண்மையில் தான் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வெறும் 52 வயது தானாம் . மேலும் அவருடைய தம்பிக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் . அப்படி ஒரு சில படங்களிலும் ,
நடித்திருக்கிறார் நடிகர் வடிவேலுவின் தம்பி . ஆனால் வடிவேலு அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லையாம் . இன்னும் சொல்லப்போனால் வடிவேலுவிற்கு கூட அவரை வைத்திருந்தாலே இன்று அவர் நன்றாக இருந்திருப்பார் . ஆனால் கல்லீரல் பிரச்சினை காரணமாக 52 வயதிலேயே உயிரிழந்தார் வடிவேலுவின் தம்பி .
மேலும் கோடி கோடியாக சொத்து வைத்திருக்கும் வடிவேலு இருக்கும்போது அவருடைய தம்பியை பார்க்காமல் இறந்த பிறகு கண்ணீர் சிந்தியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இத்தனை கோடி சொத்து இருந்தும் கூட பொறந்த தம்பிக்கு செலவு செய்ய மனசு இல்லையே என்று கூறி வருகின்றனர்…