தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இரு துருவ நட்சத்திரங்களின் போட்டி நிலவிக் கொண்டுதான் வருகிறது . அப்படி எம்ஜிஆர் -சிவாஜி தொடங்கி ரஜினி- கமல், விஜய்- அஜித் , சூர்யா- விக்ரம் , சிம்பு- தனுஷ் , சிவகார்த்திகேயன் -விஜய்சேதுபதி என்று பல பேர் உள்ளனர் . அதில் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டு வருபவர்கள் தான் விஜய் மற்றும் அஜித்.
ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது அரசியலிலும் களமிறங்க இருக்கிறார் . இருந்தாலும் அஜித்துக்கு அவருடன் போட்டி போட விருப்பம் இல்லையாம்.
அதற்கு பதிலாக அஜித் எம்ஜிஆர் யுத்தியை கையில் எடுத்துள்ளாராம். அது என்னவென்றால் விடாமுயற்சி படத்திற்குப் பிறகு வருடத்திற்கு இரண்டு திரைப்படங்கள் நடிக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம். அந்த படத்தை முடித்துவிட்டு அது சம்பந்தமாக ரசிகர்களை சந்தித்து ,
பேச்சு வார்த்தையும் நடத்த உள்ளாராம் . இந்த மாதிரி விஷயத்தை அப்போது எம்ஜிஆர் செய்து வந்தாராம் . அதைத்தான் தற்போது நடிகர் அஜித்தும் ஃபாலோ பண்ண இருக்கிறாராம். மேலும் விஜய் அரசியலில் களமிறங்கி விட்டால் அவர் படம் நடிக்க மாட்டார் என்பதால் இனிமேல் ரசிகர்கள் மீது ,
தீவிர கவனம் செலுத்தலாம் என்று அஜித் இப்படியொரு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் என்னதான் விஜயும் அஜித்தும் போட்டி போட்டுக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…