கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம் . இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன் ,லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் ,குரு சோமசுந்தரம் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இப்படி வெளியான திரைப்படத்தை சூர்யா தயாரித்து இருந்தார். உண்மை கதையை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை தாண்டி மணிகண்டன் மற்றும் லிஜோ மோலின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது . அப்படி இருந்தும் இந்த படத்திற்கு ஒரு தேசிய விருது கூட கிடைக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது . இதனால் தேசிய விருதிலும் அரசியல் உள்ளது என்று பலரும் குற்றம் சாட்டி,
வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் ஜெய் பீம் க்கு ஒரு விருது கூட இல்லையா .? இதயமே நொறுங்கி விட்டது என்று பதிவு போட்டுள்ளார் தெலுங்கு நடிகர் நானி . அந்த வகையில் தேசிய விருது வென்ற தெலுங்கு மொழி படங்களுக்கு வாழ்த்துக்களை கூறிய நானி அடுத்த பதிவில் ஜெய் பீம் என்று இதயம் நொறுங்கிய புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்…