இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பெயர் தனித்து நிற்கும் . அந்த வகையில் கடந்த 1980 ம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பின்னர் சில்க் ஸ்மிதா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார் . இதன் பிறகு தான் இவருக்கு சுக்கிர திசை ஆரம்பமானது என்று சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் , ஹிந்தி என்று பல மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வந்தார் நடிகை சில்க் ஸ்மிதா. அதுவும் அப்போது இவருடைய கவர்ச்சியில் மயங்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி தவிர்க்க முடியாத,
நடிகையாக கலக்கி கொண்டு வந்த நடிகை சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். என்னதான் அவர் இறந்து விட்டாலும் அவருடைய புகழ் அப்படியே தான் இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் சில்க் ஸ்மிதா கடித்த ,
ஒத்த ஆப்பிளை ஏலத்தில் விட்டு கல்லா கட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் . அந்த வகையில் படப்பிடிப்பின் போது நடிகை சில்க் ஸ்மிதா ஒரு ஆப்பிளை கடித்துவிட்டு பக்கத்தில் வைத்தாராம் . பின்னர் அந்த ஆப்பிளை நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் என்று ஏலத்தில் ,
விட்டிருக்கிறார்கள் . அந்த காலத்திலேயே 200 ரூபாய்க்கு அந்த ஆப்பிள் ஏலம் போனதாம். இதைப் பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதா கடித்த ஒத்த ஆப்பிளுக்கு இவ்வளவு கிராக்கியா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…