தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில காமெடி நடிகர்கள் கொடி கட்டி பறந்து வருவார்கள் . அப்படி விவேக், வடிவேலுவுக்கு பிறகு முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்து வந்தவர்தான் நடிகர் சந்தானம் . அதுவும் ஒரு நாளைக்கு ஐந்து படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக இருந்து வந்த சந்தானம் , திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை,
இனிமேல் நடித்தால் ஹீரோ தான் என்று அதிரடி முடிவெடுத்தார். அப்படி தொடக்கத்தில் இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
இதனால் மீண்டும் காமெடி நடிகராகவே நடிக்க முடிவெடுத்ததாக கூறியிருந்தார் நடிகர் சந்தானம். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சந்தானத்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டிடி ரிட்டன்ஸ் . எப்படி திடீரென தக்காளிக்கு இவ்வளவு மவுசு வந்ததோம்,
அதேபோலத்தான் சந்தானத்துக்கும் திடீரென மவுசு வந்துள்ளது. அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அதோடு இந்த திரைப்படம் இதுவரை 16 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இதனால் 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த சந்தானம் அடுத்த படத்திற்கு 8 கோடி சம்பளம் கேட்கிறாராம் . இதைப் பார்த்த ரசிகர்கள் தக்காளி விலை ஏறியது போல இவரும் தன்னுடைய சம்பளத்தை ஏற்றி விட்டார் போல என்று கூறி வருகின்றனர்…