சிவகுமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட மூத்த நடிகர் ஆவார் . கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் சிவகுமார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த சிவகுமார், அப்போதைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன் முத்துராமன் போன்ற பல நடிகர்களுடன்,
இணைந்து நடித்திருக்கிறார். இதன் பிறகு ஹீரோவாக கலக்கிக் கொண்டு வந்த சிவகுமார் ஒரு கட்டத்தில் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அப்படி விஜய் ,அஜித், விக்ரம் போன்ற பல நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டு வந்த ,
சிவகுமார் கடைசியாக பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய சிவகுமார் ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டு வந்தார் . பின்னர் சினிமா மற்றும் சீரியல் இரண்டையும் விட்டு விலகி விட்டார் சிவகுமார் .இதற்கு காரணம் ,
அவருடைய மகன்கள் தானாம் . அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஒரு சிறந்த நடிகராக பார்க்கப்பட்ட சிவகுமாருக்கு சூர்யா கார்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . இருவருமே தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக பார்க்கப்பட்டு வருகின்றனர் . இதனால் மகன்கள் தற்போது சினிமாவில்,
நடித்து வருவதால் இனி நமக்கு பிடித்ததை செய்வோம் என்று சிவகுமார் முடிவெடுத் துள்ளாராம் . அந்த வகையில் தற்போது சிவகுமாருக்கு ஆர்வமே சொற்பொழிவு ஆற்றுவதில் தான் உள்ளதாம் . இதனால் தற்போது மேடைகளில் பேசுவதற்கு தான் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறாராம் சிவகுமார்…