80 களில் ஓர் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் நடிகை நளினி . கடந்த 1981 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை நளினி. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, மனைவி சொல்லே மந்திரம் ,தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள், 24 மணி நேரம் ,உறவை காத்த கிளி, பிள்ளை நிலா,
போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை நளினி. இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 1987 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நளினி .
திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் . மேலும் திருமணமான பிறகு நடிப்பதை நிறுத்திய நளினி பின்னர் விவாகரத்துக்கு பிறகு பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி தற்போது காமெடி நடிகையாகவும் , குணசித்திர நடிகையாகவும் ,
நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை நளினி. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை நளினி . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…