April 27, 2024

தமிழ்நாடே என் பின்னால் தான் இருக்கு ..!! கோவணத்தை உருவி ஓட விட்டுடுவேன் ..!! பிரஸ் மீட்டில் கொந்தளித்த மன்சூர் அலிகான் ..!!

தற்போது தமிழ் சினிமாவின் தலைப்புச் செய்தியாக மாறிவிட்டது மன்சூர் அலிகான்- திரிஷா விவகாரம்.  அப்படி எப்போதும் விளையாட்டாக பேசி வரும் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில் திரிஷா குறித்து மிகவும் கொச்சையாக பேசியிருந்தார் . இது தான் தற்போது பூகம்பம் போல வெடித்துள்ளது . இதனால் மன்சூர் அலிகானுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

ஆனால் மன்சூர் அலிகான் நான் அப்படிப் பேசவே இல்லை . அதை தவறாக கட் செய்து இருக்கிறார்கள் என்று தன்னுடைய பக்கம் இருக்கும் நியாயத்தை கூறியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்த மன்சூர் அலிகான் கூறியதாவது ,

நான் அமைதியாக இருக்கிறேன் , அதையும் மீறி எரிமலையாக மாறினால் துண்ட காணோம் துணிய காணோம் என்று கோவணத்தை உருவி ஓட விட்டுடுவேன் . நடிகர் சங்கத்துக்கு நாலு மணி நேரம்தான் டைம் . அதற்குள் அவர்கள் விட்ட அறிக்கையை வாபஸ் வாங்க வேண்டும்.

என்னை கருப்பு ஆடாக பார்க்கிறீர்களா.?  தமிழ்நாடே என்னுடைய பின்னால்தான் உள்ளது என்று கொந்தளித்து பேசி இருந்தார் மன்சூர் அலிகான்.  இதனால் விரைவில் இவர் மீது தவறா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *