தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகர்களின் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ,
மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இதுவரை 75 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அன்று சிவகார்த்திகேயன் யார் என்று தெரியாது என்று சொல்லிய இயக்குனர் இன்று அவருடைய வளர்ச்சியை பார்த்து பிரம்மித்து போய் உள்ளார் .
அவர் வேறு யாருமில்லை மலையாள இயக்குனரும், நடிகருமான வினீத் ஸ்ரீனிவாசன் தான் . அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வினீத் சீனிவாசன், ஒருமுறை சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து இருந்தாராம் . அப்படி ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இவரிடம் ஓடிப்போய் சிவகார்த்திகேயன்,
தன்னை அறிமுகம் செய்து கொண்டாராம் . அப்போது இவருக்கு சிவகார்த்திகேயன் என்றால் யார் என்று தெரியாதாம் . உடனே உங்களுடைய நண்பர் எனக்கும் நண்பர் தான் என்று கூறியிருந்தாராம். இதன் பிறகு சில நாட்கள் கழித்து மெரினா படத்தின் போஸ்டரில் சிவகார்த்திகேயனை பார்த்திருக்கிறார் .
வினீத் ஸ்ரீனிவாசன் . இதன் பிறகு குறிப்பிட்ட காலகட்டத்திலேயே அவர் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத வந்தது அவருக்கு மிகப்பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியதாம் . இதைப் பார்த்த ரசிகர்கள் வளர்ச்சினா இப்படித்தான் இருக்கணும் என்று கூறி வருகின்றனர்…