அண்மை காலமாக சினிமா நடிகைகளுக்கு அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த சமந்தா சமீபத்தில் மையோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்தார். இதன் பிறகு தான்,
கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோயிலிருந்து மீண்டு வந்ததாக கூறி இருந்தார். இவரைத் தொடர்ந்து நடிகை அனுஷ்காவுக்கும் ஒரு அரிய வகை நோய் இருந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களைத் தொடர்ந்து விஜய் பட நடிகை ஒருவரும் ,
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அவர் வேறு யாருமில்லை நடிகை நந்திதா தான் . அட்டகத்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நந்திதா.பின்னர் இந்த தொடர்ந்து எதிர்நீச்சல் ,முண்டாசுப்பட்டி ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,
புலி ,உப்பு கருவாடு ,அ ஞ்சல போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை நந்திதா . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த நந்திதாவுக்கு பைப்ரோமியால்ஜியா என்ற அரியவகை நோய் வந்துள்ளதாம். இந்த நோய் வந்தால் ஞாபகம் மறதி ,
குழப்பம், தசைக்கோளாறு , உடல் சோர்வு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுமாம். இதனால் உடற்பயிற்சிகளை கூட செய்ய முடியாதாம். இப்படி ஒரு அரியவகை நோய் இருந்தும் கூட அடுத்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை தீவிரமாக குறைத்துக் கொண்டு வருகிறாராம் நடிகை நந்திதா…