தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் கடந்த வருடம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் . தற்போது அந்தக் கவர்ச்சியால் மிகப்பெரிய கலவரமே ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில்,
பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு இலவச என்ட்ரி கொடுத்துள்ளனர் . ஆனால் இவர்கள் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகரித்திருக்கிறது . இன்னும் சொல்லப்போனால் ,
தமன்னா காவாலயா பாட்டுக்கு ஆடுகிறார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் முட்டி மோதி விஐபி இருக்கும் இடத்திற்கு வந்துள்ளனர் . இதனால் கூட்டத்தில் சிக்கி பல பேர் மயக்கமடைந்துள்ளனர். இந்த பிரச்சனையால் இந்த நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டதாம் .மேலும் இந்த நிகழ்ச்சியில் ,
ஏற்பட்ட கோளாறுக்கு முக்கிய காரணமே சரியான திட்டமிடாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு நடிகை தமன்னாவின் கவர்ச்சியாட்டமும் ஒரு காரணமாக பேசப்படுகிறது . அந்த அளவிற்கு மோசமான உடையில் நடனம் ஆடி இருந்தாராம் நடிகை தமன்னா .
மேலும் எத்தனையோ பெரியவர்கள் கால் வைத்த யாழ்ப்பாணத்தில் இது போன்ற கவர்ச்சி ஆட்டம் தேவைதானா என்று அந்த ஊர் மக்கள் கொந்தளித்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது…