தேவயானி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தேவயானி விஜய் உடன் இணைந்து நினைத்தேன் வந்தாய், பிரெண்ட்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை தேவயானி . திருமணமான இவர்களுக்கு இனியா,
பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய முதல் படமான நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் ராஜகுமாரன். அந்த வகையில் இந்தப் படத்தில் பார்த்திபன் , அஜித் இணைந்து நடித்திருந்தனர் . ஆனால் அந்த படத்தில் விஜய் யை நடிக்க வைக்க ,
ஆசைப்பட்டிருக்கிறார் ராஜகுமாரன். அது நடக்காமல் போனதால் இரண்டாவது பாகத்தில்தன்னுடைய மகளுக்கு ஜோடியாக விஜயின் மகனை நடிக்க விடுங்கள் என்று நேரடியாகவே கேட்டு இருக்கிறாராம். அந்த வகையில் நீ வருவாய் என 2 படத்தின் முழு கதையும் தயார் செய்து விட்டாராம் ,
இயக்குனர் ராஜகுமாரன் .மேலும் இந்த படத்திலும் இரண்டு கதாநாயகன்கள் , ஒரு கதாநாயகி என்று கதையை உருவாக்கி இருக்கிறார் ராஜகுமாரன். இந்த படத்தில் தன்னுடைய மகளை கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்க உள்ளாராம் ராஜகுமாரன் . அப்படி இந்த படத்தில் ஒரு கதாநாயகனாக விஜய்யின் மகனும்,
இன்னொரு கதாநாயகனாகஇயக்குனர் விக்ரமனின் மகனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . ஏற்கனவே விஜயின் மகன் நடிப்பதை விட இயக்குனராக வேண்டும் என்பதில் தான் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ராஜகுமாரனின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…