அரவிந்த்சாமி ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தளபதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அரவிந்த்சாமி. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு மறுபடியும் ,தாலாட்டு ,பாசமலர்கள் ,பாம்பே ,இந்திரா ,மின்சார கனவு, என் சுவாச காற்றே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் அரவிந்த்சாமி . இப்படி தொடர்ந்து ,
நடித்து வந்த அரவிந்த்சாமி ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு தன்னுடைய தொழிலில் முழு கவனம் செலுத்தி வந்தார். அந்த நேரத்தில் தான் மிகப்பெரிய விபத்தில் சிக்கினார் அரவிந்த்சாமி . அப்போது அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாம் . மேலும் முதுகு தண்டில் அடிபட்டதால்,
அவரால் நடக்கக்கூட முடியாமல் போனதாம். இதனால் முடியெல்லாம் கொட்டி , உடல் எடையை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாராம் நடிகர் அரவிந்த்சாமி . இதன் பிறகு வந்த உருவகேலியால் நொந்து போன நடிகர் அரவிந்த்சாமி தன்னைத்தானே செதுக்கி,
கொண்டாராம் . இதன் பின்னர் தான் தனி ஒருவன் படத்தில் வில்லனாக ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தி இருந்தார் நடிகர் அரவிந்த்சாமி . இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி…