ஐஸ்வர்யா ராய் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் பின்னர் உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் . அப்படி தமிழில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கினார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ,
எந்திரன், ராவணன் , பொன்னியின் செல்வன் என்று பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது ஹிந்தி சினிமா தான் . அந்த வகையில் ஹிந்தி சினிமா உலகில் கொடி கட்டி பறந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய்,
பிரபல ஹிந்தி நடிகரான அபிஷேக் பிரச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் திருமணமாகி பதினாறு வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது,
ஐஸ்வர்யா ராய் புகுந்த வீட்டை விட்டு பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் எல்லா வீட்டிலும் இருக்கும் பிரச்சனை தான் , அது என்னவென்றால் ஐஸ்வர்யா ராய்க்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தான் இவர் புகுந்த வீட்டை விட்டு,
வெளியேற முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உங்களுக்கு நான் முக்கியமா இல்லை .?உங்க அம்மா முக்கியமா .? என்றெல்லாம் தன்னுடைய கணவரிடம் பேசி இருந்தாராம் ஐஸ்வர்யா ராய். இதுதான் தற்போது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது…