சிவகார்த்திகேயன் தற்போது தவிர்க்க முடியாத பிரபல நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் . தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். குறிப்பாக இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி விடுகிறது . இதை அடுத்து தற்போது மாவீரன்,
அயலான் என்று மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார் . அப்படித்தான் சமீபத்தில் வண்டலூர் ஜூவில் ஒரு ஆண் சிங்கத்தை,
தத்தெடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . அதற்கான காரணம் என்னவென்றால் வண்டலூர் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளதாம். அவற்றை பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டத்தை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்களாம் .
அப்படி அந்த விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அந்த விலங்குகாக ஆகும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம் . அந்த வகையில் தற்போது வண்டலூர் பூங்காவில் 3 வயதான ஷேரு என்ற ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன் .
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே யானை, புலி போன்ற விலங்குகளையும் நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனின் செயலுக்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர் …