ராமராஜன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ராமராஜன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், ஒன்றி எங்கள் ஜாதியே ,சென்பகமே செண்பகமே, ரயிலுக்கு நேரமாச்சு ,எங்க ஊரு காவல்காரன்,
கரகாட்டக்காரன் , தங்கமான ராசா போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . அதுவும் தொடர்ந்து கிராமத்து படங்களில் நடித்து வந்ததால் இவர் ரசிகர்களால் கிராமத்து நாயகன் மற்றும் மக்கள் நாயகன் என்று,
அழைக்கப்பட்டு வந்தார். இதன் பிறகு அரசியலில் களம் இறங்கியதால் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த ராமராஜன் கிட்டத்தட்ட 10 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில்,
தன்னுடைய பேரனை பற்றி பேசி இருந்தார் நடிகர் ராமராஜன் . அந்த வகையில் ராமராஜனின் மகன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டாராம் . அப்போது அவருடைய மகனுக்கு தன்னுடைய அப்பாவான ராமராஜனின் செண்பகமே செண்பகமே பாடலை போட்டு காட்டி,
இருக்கிறார் . அப்போதிலிருந்து ராமராஜனின் பேரன் ” cow தாத்தா ” என்றுதான் இவரை அழைக்கிறாராம் . அப்போது அந்த மாதிரி நடித்ததால் என்னுடைய பேரன் இப்போது இப்படி கூப்பிடுவது எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று கூறியிருந்தார் ராமராஜன்…