தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் நடிகர் சந்தானம் . ஆரம்பத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம் மன்மதன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார். இப்படி அறிமுகமான குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சந்தானம்.இப்படி பிசியான காமெடி நடிகராக ,
கலக்கி கொண்டு வந்த சந்தானம் திடீரென நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று முடிவெ டுத்தார் . ஆனால் ஆரம்பத்தில் இவரன் நடித்த ஒரு சில படங்கள் ஓடினாலும் சமீபகா லமாக வெளியான எந்த ஒரு திரைப்படங்களும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை .
இதனால் இனிமேல் காமெடி நடிகராக நடிக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளாராம் சந்தானம் . அதோடு இவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொன்னபோது பலரும் வேண்டாம் என்று சொன்னார்களாம் . ஆனால் நான்தான் கேட்கவில்லை என்று புலம்பி இருந்தார் சந்தானம்…