April 27, 2024

நாங் கள் ஒன் றும் பணக் காரர்க ள் இல் லை ..!! எங்களு க்கு இ வ்வ ளவு கடன் உள் ளது ..!! ” சூப் பர் சிங் கர் ” ராஜ லட் சுமி வே த னை ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு.  அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  அப்படி பல வருடங்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் உருவாகி உள்ளனர்.  அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர்கள் தான்,

செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி . குறிப்பாக இவர்கள் இருவரும்” என்ன மச்சான் சொல்லு புள்ள “என்ற பாடல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்கள் . இதன் பிறகு இவர்களுக்கு சினிமாவில் பாடவும் வாய்ப்பு வந்தது.  அப்படி செந்தில் கணேஷ் சீம ராஜா ,சார்லி சாப்ளின் 2 ,விஸ்வாசம், காப்பான் ,பட்டாசு, சூரரைப்போற்று போன்ற ,

பல திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடி இருக்கிறார் . அதோடு  பல நிகழ்ச்சிகளுக்கு சென்றும் பாடி வருகின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் பிரம்மாண்ட வீட்டை கட்டியிருந்தார்கள்.  இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராஜலட்சுமி, எங்களுடைய தொழிலில் நிறைய சவால்கள் உள்ளது .

வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் உள்ளது . நாங்கள் நன்றாக வளர்ந்து விட்டோம்,  பணக்காரர்கள் ஆகிவிட்டோம் என்றெல்லாம் விமர்சனம் வருகிறது.  ஆனால் நாங்கள் வீடு , கார் எல்லாம் லோன் போட்டு தான் வாங்கினோம் . அதுவும் கொரோனா காலத்தில் எங்களுக்கு வேலையே இல்லை .

அதை கடந்து தான் வந்தோம் . அப்போது கடன் வாங்கி தான் செலவு செய்தோம் . மீண்டும் அப்படி ஒரு நிலை வந்தால் எல்லாத்தையும் பேங்குக்கு கொடுத்துவிட்டு எங்களுடைய சொந்த கிராமத்துக்கே போய் தான் ஆக வேண்டும் என்று கூறியிருந்தார் ராஜலட்சுமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *