மறைந்த நடிகர் மயில்சாமி சிறுவயதிலிருந்தே சினிமா மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார் . இதன் பிறகு சினிமா மீது இருந்த ஆர்வத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் நடிப்பில் வெளியான தாவணிக்கனவுகள் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் மயில்சாமி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டு வந்தார்,
நடிகர் மயில்சாமி .பின்னர் ஒரு கட்டத்தில் விவேக் ,வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் நடிகர் மயில்சாமி. குறிப்பாக கண்களால் கைது செய் என்ற படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான,
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதையும் வென்றார் நடிகர் மயில்சாமி. இப்படி இருந்த நிலையில் கடந்த வருடம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் நடிகர் மயில்சாமி . மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அவர் இறந்த பிறகு தான் பலருக்கும் தெரிந்தது.
மேலும் நடிகர் மயில்சாமிக்கு அன்பு ,யுவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இன்று நடிகர் மயில்சாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளாம் . அதனால் அப்பாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர் அவருடைய மகன்கள்…