பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று பல இளம் நடிகர் நடிகைகள் ஏங்கிக்கொண்டு வருகின்றனர். ஆனால் விஜய் உடன் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ஒரு நடிகை. அவர் வேறு யாருமில்லை நடிகை சஞ்சனா சாரதி தான் . கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18 கீழ் 9 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை , வாலு, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இவர் நடித்தது எல்லாமே ,
தங்கை கதாபாத்திரத்தில் தான் . இதனால் இனிமேல் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்து விட்டாராம் . அந்த நேரத்தில் தான் மீண்டும் இன்னொரு படத்தில் விஜய்யுடன் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு சஞ்சனாவுக்கு வந்ததாம் .இதனால் சஞ்சனா அந்தப் படத்தை நிராகரித்து விட்டாராம்…