தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் ஃபேவரைட் காமெடியனாக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . என்னதான் இவர் தன்னுடைய காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் மறுபக்கம் இவருடைய மோசமான குணத்தால் பல பெயரை கலங்க வைத்தும் வருகிறார் . அந்த வகையில் வடிவேலுவின் உண்மை முகத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் நடிகை ஆர்த்தி . அந்த வகையில் ஆரம்பத்தில்,
குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த ஆர்த்தி அருள் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து கிரி, திருப்பதி ,தாமிரபரணி ,குருவி ,ஜெயம் கொண்டான், படிக்காதவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இவர் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடிகளில் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவை பற்று பேசிய ஆர்த்தி கூறியதாவது , வடிவேலுவுடன் ஒரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தேன் . அப்போது என்னுடைய நடிப்பை பார்த்த வடிவேலு ,
என்னை கூப்பிட்டு நீ என்னை விட சூப்பரா நடிக்கிறம்மா என்று பாராட்டினார் . ஆனால் என்னிடம் இப்படி கூறிவிட்டு படத்தின் இயக்குனரை கூப்பிட்டு என்னை விட அந்த பொண்ணு நல்லா நடிக்குது, நம்ம படத்துக்கு இந்த பொண்ணு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் .
குறிப்பாக என்னைப் போலவே என்னுடைய கணவருக்கும் இப்படி செய்து இருக்கிறார் வடிவேலு. மேலும் பாம்பின் குணம் கொத்துவது தான் .அதை யாராலும் மாற்ற முடியாது ,அதே போலத்தான் வடிவேலுவின் குணத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்று கூறியிருந்தார் நடிகை ஆர்த்தி…