90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தேவயானி. பெங்காலி படத்தில் மூலம் அறிமுகமான தேவயானி கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். இருந்தாலும் இவரைப் பற்றித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது காதல் கோட்டை திரைப்படம் தான் . பின்னர் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ,
சூர்யவம்சம், மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய் ,நீ வருவாய் என ,சுயம்வரம், தெனாலி, ஃபிரண்ட்ஸ் ,ஆனந்தம் ,அழகி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகை தேவயானி. குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே குடும்ப பாங்கான கதைக்களத்தில் தேவயானி நடித்து வந்ததால்,
இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான ராஜகுமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை தேவயானி . திருமணமான இவர்களுக்கு இனியா ,பிரியங்கா என்ற,
இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் 18 வயதாகும் தேவயானியின் இரண்டாவது மகள் 58 வயது நடிகருடன் ஜோடி போடுவதற்கு ஆசைப்படுகிறாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் ஷாருக்கான் தான் இதுவரை இவருடைய நடிப்பில் வெளியான ,
எல்லா திரைப்படங்களையும் தேவயானி மகள் பார்த்து விட்டாராம். இதனால் அவருக்கு ஷாருக்கானுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இந்த தகவலை தேவயானியும் அவருடைய கணவரும் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…