தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு . கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் கஞ்சா கருப்பு . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ராம் ,சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, உனக்கும் எனக்கும், தாமிரபரணி ,பருத்திவீரன் ,அழகிய தமிழ் மகன் ,அறையின் 35ல் கடவுள்,
சுப்ரமணியபுரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் கஞ்சா கருப்பு. இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த கஞ்சா கருப்பு தயாரிப்பாளராக வேல்முருகன் போர்வெல்ஸ் சென்ற படத்தை தயாரித்திருந்தார் .
ஆனால் இந்த ஒரு படத்தால் இவருடைய வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் கஞ்சா கருப்பு . அதில் அவர் கூறியதாவது, வடிவேலு யாருக்கும் எப்போதும் ,
எதுவுமே கொடுக்க மாட்டார். ரொம்ப நல்லவருங்க அவரு, யாருக்கும் கொடுக்காததால் தான் அவர் இப்ப நல்லா இருக்காரு . நாங்க எல்லாம் கொடுத்ததினால் கெட்டுப் போய் இருக்கிறோம் . மேலும் அவர் யாருக்கும் ஒரு ரூபா கொடுக்க மாட்டாரு. டீ சாப்பிட்டா கூட,
பத்து பைசா கொடுக்க மாட்டார் அதனால் தான் அவர் இப்போதும் நல்லா இருக்காரு என்று கூறியிருந்தார் கஞ்சா கருப்பு. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …