கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு நல்ல தலைவராக இருக்கும் அந்தஸ்து நிறையவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார் . அதுவரை மீளா கடனில் இருந்து வந்த நடிகர் சங்கத்தை தூக்கினு நிறுத்தினார் விஜயகாந்த். அது மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் நடிகர்களை,
வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்கத்தின் மொத்த கடனையும் அடைத்தார் விஜயகாந்த் . இதனாலேயே விஜயகாந்த் மீது எல்லோருக்கும் ஒரு தனி அபிப்பிராயம் ஏற்பட்டது . இதன் பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார் விஜயகாந்த்.
அப்படி இவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றியையும் சந்தித்தார் . ஆனால் இப்படி ஹீரோவாக இருந்து வந்த விஜயகாந்தை அந்த இரண்டு பெண்கள் கோமாளியாக மாற்றி விட்டனர் . அது வேறு யாருமில்லை ஜெயலலிதா மற்றும் பிரேமலதா தான் . ஜெயலலிதா உடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு ,
விஜயகாந்தை ஊடகங்கள் அப்படியே கோமாளியாக மாற்றி விட்டது. இதன் பிறகு பிரேமலதாவும் பேராசையில் கேப்டனின் அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்து விட்டார் . அதோடு கடந்த வாரம் விஜயகாந்தால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை . அப்படி இருந்தும் கூட விஜயகாந்தை ,
முன்னிலையில் வைத்து தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் பிரேமலதா . மேலும் விஜயகாந்திடம் ஒரு நல்ல அரசியல்வாதிக்கான எல்லா தகுதிகளும் இருந்த போதும் இந்த இரண்டு பெண்களால் அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது என்று அரசியல் விமர்சகர் சுமன் கவி கூறியுள்ளார்…