விஜயராஜ் என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த் பிறப்பால் ஒரு பணக்கார வீட்டு பிள்ளையாவார் . இன்னும் சொல்லப்போனால் அந்த காலகட்டத்திலேயே இவர்களுக்கு சொந்தமாக அரிசி மில் ஒன்று இருந்ததாம். அப்படி ஆரம்பத்தில் அதை கவனித்து வந்த விஜயகாந்த் பின்னர் சினிமா மீது இருந்த ஆசையினால் சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார் . அப்படி அவர் சென்னைக்கு வந்தபோது ,
அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் அந்த கடவுளுக்கு மட்டுமே தெரியும். காரணம் அவருடைய நிறம் தான். ஆனால் அதையும் தாண்டி கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தில் விஜயகாந்த் என்ற பெயரில் அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,
பல திரைப்படங்களில் நடித்து வந்த விஜயகாந்துக்கு சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது . இதன் பிறகுதான் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வந்தார் விஜயகாந்த் . அதுவும் இவர் உச்ச நடிகராக இருக்கும்போதே,
அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களையும் வளர்த்து விட்டார் . இப்படி இருக்கும் நிலையில் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த விஜயகாந்த் முதன் முதலாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…