இன்று கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் எம்ஜிஆருக்கு பிறகு மக்களில் ஒருவராக இருந்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்மட்டும் தான் . உதவி என்று கேட்டால் அள்ளிக் கொடுப்பவர் விஜயகாந்த் .
இதனாலேயே இவரை கருப்பு எம்ஜிஆர் என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும்,
வேதனையும் ஏற்படுத்தி உள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவு ஒன்றை போட்டது மட்டுமல்லாமல் அதிரடி உத்தரவும் போட்டு இருக்கிறார் . அதில் அவர் கூறியதாவது, கேப்டன் என்று தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின்,
மறைவு தமிழ்நாட்டிற்கும், திரையுலகிற்கும் பேரிழப்பாகும் . கேப்டன் விஜயகாந்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்களுக்கும் ,திரையுலகினருக்கும்,
ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் . மேலும் திரு விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய இறுதி பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று கூறியிருந்தார் மு க ஸ்டாலின்…
அன்பிற்கினிய நண்பர் – தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும்… pic.twitter.com/ZcT7ubisc4
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 28, 2023