April 29, 2024

விஜயகாந்தின் இறப்பிற்கு காரணம் இது தான் ..!! கொரோனா எல்லாம் கிடையாது ..!! மருத்துவமனையே வெளியிட்ட அறிக்கை ..!!

கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு பிரபலங்களும் , ரசிகர்களும் சோகத்தில் கதறி வருகின்றனர் . மேலும் இப்படி ஒரு நல்ல மனிதர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது சந்தேகம்தான் . குறிப்பாக சினிமாவிற்காகவும்,  ரசிகர்களுக்காகவும் நிற்காமல் ஓடிய விஜயகாந்த் அவருடைய உடல் நிலையை பார்த்துக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  இதனால் தான் கடந்த சில வருடங்களாகவே,

இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது . அது மட்டுமல்லாமல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் . இதனால் மீண்டும் எங்களை எல்லாம் கேப்டன் பார்க்க வருவார் என்று,

ரசிகர்கள் ரொம்ப நம்பிக்கையுடன் இருந்து வந்தனர் . இந்நிலையில் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.  மேலும் விஜயகாந்துக்கு கொரோனா ஏற்பட்டதால் தான் அவர் இறந்து விட்டார் என்றும்,

கூறப்பட்டது . இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் அனுமதிக்க பட்டிருந்த மருத்துவமனை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அலர்ஜி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் ஆதரவுடன் ,

சிகிச்சை பெற்று இருந்தார்.  மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும், அவர் இன்று காலை காலமானார் என்று கூறியிருந்தனர் . இதோ அந்த மருத்துவமனியின் அறிக்கையை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *