தமிழ்நாட்டில் ஒரு முக்கிய யூடியூப்ராக இருந்து வருபவர் டிடிஎஃப் வாசன் . ஆரம்பத்தில் இருந்தே பைக் ரைடு செய்யும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் டிடிஎப் வாசன் . இப்படி இருந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தால் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்தார் டிடிஎஃப் வாசன். இதனால் இவருடைய லைசென்ஸை 10 வருஷம் கேன்சல் செய்ததாகவும் ,
தகவல் வெளியானது . இந்நிலையில் டிடிஎஃப் வாசனை தொடர்ந்து தனுஷின் மகனான யாத்ராவும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் . அந்த வகையில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனுஷுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் தனுஷின் மூத்த மகனான யாத்ராவுக்கு இன்னும் 18 வயது கூட நிறைவடையவில்லை. அப்படி இருக்கும்போது சில தினங்களுக்கு முன்பு ரஜினி வீட்டில் இருந்து தனுஷ் வீட்டிற்கு ஆர்15 பைக்கில் சென்று இருக்கிறார் யாத்ரா. இதைப் பார்த்த செய்தியாளர் ஒருவர் அதை வீடியோ,
எடுத்திருக்கிறார் . அதை பார்த்த உதவியாளர் வீடியோவை எடுக்க விடாமல் வாக்குவாதம் செய்து இருக்கிறார் . மேலும் தனுஷின் மகனுக்கு இன்னும் 18 வயசு ஆகவில்லை. அப்படி இருக்கும்போது லைசென்ஸ் இல்லாமல் பைக்கில் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அப்படி இவருக்கு பைக் ஓட்ட ஆசை இருந்தால் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்து பழகியிருக்கலாம் . ஆனால் இப்படி பொது இடத்தில் யாத்ரா வந்தது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்த ரசிக அப்ப டிடிஎஃப் வாசன் , இப்ப தனுஷின் மகனா என்று கூறி வருகின்றனர்…