தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரனின் மகனான விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் நடிகர் விஜய் . மேலும் திருமணமான விஜய்க்கு ஒரு மகனும்,
ஒரு மகளும் உள்ளனர் . இதில் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து வந்தார் . அப்படி படிக்கும்போதே ஒரு சில குறும்படங்களையும் இயக்கி இருந்தார் விஜய்யின் மகன் . இப்படி இருக்கும் நிலையில் விரைவில் ,
இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார் ஜேசன் சஞ்சய் . அந்த வகையில் அவர் இயக்கும் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் விஜய்யின் மகன் முதல் படத்திலேயே பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் அவருடைய படத்தின் மீது,
ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் டாகியுள்ளாராம் பிரபல நடிகர் ஒருவர் . அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்கள் தான் கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா. இந்த மூன்று ,
நடிகர்களில் யாரைவது ஒருவரை தான் ஹீரோவாக வைத்து ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார் என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார். குறிப்பாக கவின் அல்லது அதர்வாவை நடிக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…