தேவா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசையமைப்பாளர் தேவா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வைகாசி பொறந்தாச்சு ,நம்ம ஊரு பூவாத்தா, வசந்தகால பறவை, சூரியன், சோலையம்மா ,செந்தூரப்பாண்டி ,ஆசை, காதல் கோட்டை,
பாரதி கண்ணம்மா போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார் தேவா. குறிப்பாக இவர் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி, கமல் ,விஜய் ,அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
அது மட்டுமல்லாமல் இவருடைய கானா பாடல்கள் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் விரைவில் வில்லன் அவதாரம் எடுக்க உள்ளாராம் இசையமைப்பாளர் தேவா . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தேவா கூறியதாவது, தனுஷ் இயக்கி,
நடித்து வரும் அவருடைய ஐம்பதாவது படத்தில் என்னை வில்லனாக நடிப்பதற்கு கூப்பிட்டார் . உடனே நான் அதிர்ச்சியாகி விட்டேன். பின்னர் எதற்காக என்னை தேர்ந்தெடுத்தீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு தனுஷ் , உங்களுடைய மெட்ராஸ் ஸ்லாங் மிகவும் ,
அருமையாக இருக்கும். அதுதான் இந்த படத்திற்கு தேவை என்று கூற , எனக்கு வசனம் எல்லாம் ஞாபகம் வைத்து சொல்வது கஷ்டம் என்று கூறியிருக்கிறார் தேவா. அதற்கு தனுஷ் அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் சார் என்று கூறிவிட்டாராம்…