ராசி கண்ணா ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஹிந்தி படத்தின் மூலம் தமிழ் திரைப்பயணத்தை தொடங்கிய ராசி கண்ணா கடந்த 2018 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு, விஷால் நடிப்பில் வெளியான,
அயோக்கியா விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன் ,துக்ளக் தர்பார், ஆர்யா நடிப்பில் வெளியான அரண்மனை 3 , தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ராசி கண்ணா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,
தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து தற்போது நான்கு படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ராசி கண்ணா. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 33வது பிறந்த நாளை ,
வீட்டிலேயே மரம் நட்டு வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார் நடிகை ராசி கண்ணா. தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ராசி கண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…