தற்போது பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் என்னை பிக் பாஸுக்கு வர சொல்லி தொல்லை செய்யறாங்க என்று வெளிப்படையாக சொல்லி உள்ளார் பிரபல நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை ஓவியா தான். கடந்த 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா ,கலகலப்பு, மூடர்கூடம், மதயானை கூட்டம் ,யாமிருக்க பயமே ,போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் நடிகை ஓவியா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,
மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இருந்தாலும் இவரை ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாக் கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் . அப்படி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட நடிகை ஓவியாவுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் ஆளே அட்ரஸ் தெரியாமல் இருந்து வந்தார் நடிகை ஓவியா . இப்படியொரு நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் , தன்னை பிக் பாஸுக்கு சிறப்பு விருந்தினராக வர சொல்லி அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது . ஆனால் நான் போகலாமா .? வேண்டாமா .? என்று ,
யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஓவர் பந்தா காட்டி இருந்தார் நடிகை ஓவியா . இருந்தாலும் இவர் பிக் பாஸுக்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் இவர் பிக் பாஸுக்கு வருவரா என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது …